திருச்சி மாவட்டம் துறையூர் அருகே துணை தாசில்தாரின் தந்தை மர்ம சாவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே துணை தாசில்தாரின் தந்தை மர்மமாக இறந்து கிடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2022-01-13 10:16 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பையா (வயது 63). இவருக்கு நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. சுப்பையா அவரது வயலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வேல்முருகன் என்பவரது தோட்டத்தின் அருகே மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் உடலில் லேசான காயங்களுடன் மர்மமான முறையில் சுப்பையா இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பையாவின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுப்பையாவின் மகன் கோவிந்தராஜ் உப்பிலியபுரம் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News