துறையூர் அருகே ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

துறையூர் அருகே உப்பிலியபுரம் கோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-23 17:05 GMT
துறையூர் அருகே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையன், 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் பிரகாஷ் (21). கடந்த ஜீன் 21-ம் தேதியன்று, வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில், உப்பிலியபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு , மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பியின் பரிந்துரையின் படி  மாவட்ட ஆட்சியர் சிவராசு, பிரகாஷை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News