துறையூர் அருகே விவசாயி சாவில் திடீர் திருப்பம் : போலீசார் அதிர்ச்சி

துறையூர் அருகே விவசாயி சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Update: 2021-12-12 05:00 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலையில் தோட்டத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால் குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்க்கையில் இறந்து கிடந்துள்ளார். சேற்றில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில், உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், முருகேசன் வரப்பில் நடந்து செல்லும் போது, மின்மோட்டாருக்கு செல்லும் மின் இணைப்பு பெட்டியில் கை வைத்துள்ளார். அப்போது, அவர் மின்சாரம் பாய்ந்ததில் இறந்தது தெரியவந்தது.

Tags:    

Similar News