திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில் தற்கொலை

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தாய்வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-16 06:18 GMT

திருச்சி மாவட்டம் காட்டூர் பாரிநகரை சேர்ந்தவர் விஜய்வெங்கடேஷ், டிரைவரான இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 7-ந் தேதி பிரேமா திருச்சி மன்னார்புரம் செங்குளம்காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் திடீரென பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News