ரயில்வே துறை தனியார் மயம்: ஓய்வு ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-14 04:45 GMT

பைல் படம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற ரயில்வே  ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வேயை தனியாரிடம் கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை கோட்டத் தலைவர் பவுல் ரெக்ஸ் தலைமை வகித்தார். இதில், ரயில்வே, சாலை, விமானம், கப்பல், சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது. அங்கீகாரத்திற்கான தொழிற் சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News