திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் திடீர் மாயம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் என மாயமானார்.

Update: 2021-11-19 12:22 GMT

திருச்சி பொன்மலை கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி அழகுமயில் அம்மாள் (வயது 55). சம்பவத்தன்று இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் மருத்துவமனைக்கு அவரது மகன் சந்தோஷ்குமார் பார்க்க சென்ற போது அழகு மயில்அம்மாள் அங்கு இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்க வில்லை. இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு மயில்அம்மாளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News