திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி

திருச்சியில் வெட்டி கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீசார் நிதி உதவி வழங்கினர்.

Update: 2021-12-02 06:27 GMT

திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீசார் சார்பில் ஐந்தரை லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த  பூமிநாதன் கடந்த மாதம் இரவு ரோந்து பணியில் இருந்த போது  ஆடு திருடர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பூமிநாதனின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் சார்பாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்து 600 வசூல் செய்யப்பட்டது. இதை பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா ஆனி கிறிஸ்டி திருச்சியில் உள்ள பூமிநாதனின் இல்லத்திற்கே நேரில் சென்று அவருடைய மனைவி மற்றும் மகனிடம் வழங்கினார்.

Tags:    

Similar News