திருச்சி அண்ணாநகர் கிளை நூலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் கிளை நூலகத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-26 15:02 GMT

நவல்பட்டு அண்ணாநகர் கிளை நூலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணாநகரில் கிளை நூலகம் உள்ளது. இங்கு இன்றுகாலை நாட்டின் ௭௩வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நூலகத்தின் வாசகர் வட்ட தலைவரும், புரவலருமான  ம. செல்வரத்தினம் தலைமை தாங்கினார்.

நூலக பணியாளர் மு வீரசேகரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். ம செல்வதாஸ் வாழ்த்துரை வழங்கினார். புரவலர்கள் அன்பழகன், சக்திவேல், துரை கண்ணு, ரகுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News