திருச்சி: சிறையில் இருந்து வந்தவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

சிறை சென்று திரும்பிய வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

Update: 2021-10-11 12:15 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலையாளன் (வயது 46). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணிற்கும் கள்ளத்  தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அந்தப் பெண் மலையாளனை விட்டு, விட்டு வேறொரு ஆணுடன் தொடர்பில் ஈடுபட்டு இருந்தபோது அதனை பார்த்த மலையாளன் அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த அந்த வாலிபரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்றார்.

பின்னர் மலையாளன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மலையாளனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.இதற்கிடையே நேற்று முன்தினம் முழுவதும் மது போதையில் இருந்த மலையாளன் தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனால் நேற்று மதியம் மலையாளன் இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலையாளன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News