திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை. தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Update: 2021-10-13 10:00 GMT

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பனிமலையில் ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் பழுது பார்த்தும், தயாரித்தும் வெளிநாடு, இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இங்கு சுமார் 3 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த பணிமனையில்  பல்வேறு ஷாப்புகள் உள்ளன. இன்று அந்தந்த ஷாப்களை சேர்ந்த தொழிலாளர்கள் பூஜை நடத்தினர்.

பணிமனைக்கு பொது மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து, அங்கு இந்த ரயில் எஞ்ஜின்கள்,கருவிகளின் முன்பாக நின்றும்,  மகிழ்ச்சியடைந்து  ஆர்வமாக  செல்போனில் செல்பி எடுத்தும், குரூப் படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.


இங்கு வட மாநிலத்தவர்கள் சுமார் 1,200 -க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருவதால் அதிகளவு வட மாநிலத்து குடும்பங்களையே காண முடிந்தது.

Tags:    

Similar News