திருச்சி அருகே ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி

திருச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கொல்ல முயன்ற வாலிபரை நவல்பட்டு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-14 06:10 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 45). இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இவருக்கும் பர்மா காலனியை சேர்ந்த அண்ணாதுரை மகன் ரஞ்சித் (வயது 40), என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜேம்சை, ரஞ்சித் அரிவாளால் வெட்ட முயன்றதாக ஜேம்ஸ் நவல்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து  திருச்சி  கோர்ட்டில் ஆஜர் படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News