திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

திருச்சியில் நடந்த விபத்தில் அரசு பஸ் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலியானார்.

Update: 2022-01-26 10:58 GMT

சாலை விபத்தில் இறந்த விஜயபிரபாகரன்.

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ராஜூ இவரது மகன் விஜயபிரபாகரன் (வயது 28).  இவர் திருச்சி ஏர்போட்டில் ஒப்பந்த அடிப்படையில் முன்பு வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது வீட்டில் வேலை இல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயபிரபாகரன் நேற்று மாலை திருச்சி புதுக்கோட்டை சாலையில் பைக்கில் சென்றபோது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு புறநகர் பேருந்து எதிர்பாராத வகையில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயபிரபாகரன் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜய பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும், தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவரையும் தேடியும் வருகின்றனர்.

Tags:    

Similar News