ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

Update: 2021-12-16 13:33 GMT
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நாழி கேட்டான் வாசல், ராஜ மகேந்திரன் சுற்று வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வந்தடைந்து, பகல் 1 மணிக்கு பரமபத வாசலை கடந்தார்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியில் உள்ள மணல்வெளியில் ஆழ்வார் மரியாதை கண்டு, திருமாமணி மண்டபத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம், திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்..

Tags:    

Similar News