ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா: 6-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் வைகுந்த ஏகாதசி விழாவில் நம்பெருமாள் இன்று நீள்முடிகிரீட அலங்காரத்தில் எழுந்தருளினார்.

Update: 2021-12-09 04:32 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் ஸ்ரீநம்பெருமாள் இன்று நீள் முடி கிரீட அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 6-ஆம் நாளான இன்று நீள்முடிகிரீட அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநெடுந்தாண்டகத்துடன் இந்த திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. பகல் பத்து வைபவத்தின் முதல் நாளில்உற்சவர்நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

அதே போல ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டார். தொடர்ந்து பகல் பத்து 6-ஆம் நாளான இன்று (09.12.2021) நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின அபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசு மாலை அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News