ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் இன்று திறக்கப்பட்டது.

Update: 2021-12-08 15:26 GMT

ஸ்ரீரங்கத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட சமய நூலகம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பின்படி மேம்படுத்தப்பட்ட சமயநூலகம் இன்று 08.12.2021 புதன் கிழமை காலை 09.00 மணிக்கு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் மோகன், மேலாளர் உமா ஆகியோர் பங்கு பெற்றனர். இந்நூலகத்தில் மிகப் பழமையான வைணவ நூல்கள் அதிகமாக உள்ளது.

இந்நூலகமானது காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்படும், மதியம் 1.00 - 2.00 மணி வரை இடைவேளை நேரம். செவ்வாய்க் கிழமை விடுமுறை, இந்நூலகத்திற்கு இந்து சமய நூல்களை நன்கொடையாக தர நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News