திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் தேவர் படத்திற்கு மரியாதை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
114-வது தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராசு, பரமேஸ்வரி முருகன், இந்திரா காந்தி, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு (எ) சுப்பிரமணியன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட பொருளாளர் சேவியர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.