மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் -மருத்துவர் நல சங்கம் கோரிக்கை

மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என . ஸ்ரீரங்கம் மருத்துவர் நல சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-09-16 07:45 GMT

ஸ்ரீரங்கத்தில் மருத்துவர் சமூக நல சங்கத்தினர் மருத்துவர் தினம் கொண்டாடினர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி உலக முடி திருத்துவோர் தினமாக  கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் இன்று ஸ்ரீரங்கத்தில் உலக முடிதிருத்துவோர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கொடி ஏற்றினார்.

கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களையும், ஊராட்சி கிராமப்புற தொழிலாளர்களையும் அரசு ஊழியராக பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்க வேண்டும். மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். எம்.பி.சி. உள் ஒதுக்கீட்டை இரண்டரை சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். பி.சி.ஆர். சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் செயலாளர் ராஜலிங்கம், ஆலோசகர் சுரேஷ்,இளைஞர் அணி அமைப்பாளர்கள் மாரிமுத்து, ஜீவரத்தினம், பிரபாகரன், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News