திருச்சி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீ குளித்து தற்கொலை

திருச்சி அருகே குடும்ப தகராறில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-23 11:30 GMT

கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பிரியா.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சத்திரப்பட்டி ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல இன்றும் சண்டை நடந்துள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த  பிரியா தனது உடம்பில் அடுப்பு எரிய ஊற்றப்படும் எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும் அருகில்இருந்த குழந்தையை கட்டியணைத்து இருக்கிறார். இதில் சம்பவஇடத்திலேயே பிரியாவும், அவரது இரண்டரை வயது குழந்தையும் உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை செய்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News