திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-12 06:00 GMT

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மூன்றாவது மகள் கிருஷ்ணவேணி (வயது 28). இவர் சற்று மனநிலை பாதித்த நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் மாடிக்கு சென்றவர், திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News