பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவியிடம் சில்மிசம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.

Update: 2022-02-18 09:04 GMT

கைது செய்யப்பட்ட ஆசிரியர் முருகேசன்.

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகில் உள்ள இனாம் குளத்தூரில் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளி. செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று பள்ளியில் படிக்கும் +2 மாணவி ஒருவர் தேர்வு எழுதிகொண்டிருந்த போது, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவரும்  முருகேசன் என்பவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பள்ளியின் முன்பு குவிந்தனர். தகவலறிந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர் முருகேசனை ஒரு அறையில் பூட்டி வைத்து பாதுகாத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த இனாம்குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரனையில் ஆங்கில ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன்,  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோர் நேரில் வந்தனர்.  சிறிது நேர விசாரனைக்கு பிறகு ஆங்கில ஆசிரியர் முருகேசனை மீட்டு ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

Similar News