ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 5-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி 5-ம் நாள் விழாவான இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

Update: 2021-12-08 04:29 GMT

பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோகம் வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் வைகுந்த ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா பகல் பத்து, ராப்பத்து என்று நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின்  5- ம் நாளான இன்று (08.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் இரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகைக் காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து  எழுந்தருளினார்.

தனுர் லக்னத்தில் புறப்பட்ட நம்பெருமாள்  அர்ஜூன மண்டபத்திற்கு சென்றடைந்தார். அங்கு நம்பெருமாளுக்கு அரையர் சேவையுடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.  இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News