திருச்சி காவிரி ஆற்றின் படித்துறையில் முதியவர் சடலமாக மீட்பு

திருச்சி காவிரி ஆற்றின் படித்துறையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-11-07 07:47 GMT

ஜீயபுரம் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த முதியவர்.

திருச்சி முத்தரசநல்லூர் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட அலுவலகத்தின் பின்புறம் உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் நேற்று மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது படிகளில் இறங்கி குளித்த போது திடீரென தண்ணீரில் மூழ்கி சுமார் 3 அடி தூரம் சென்று செடிகளுக்கிடையில் தேங்கி இறந்த நிலையில் இருந்ததை கண்டு அங்கு குளிக்க சென்ற பொதுமக்கள் பார்த்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரனணயில் இறந்து கிடந்தவர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று உடனடியாக  தெரியவில்லை. இறந்த முதியவர் ஊதாகலரில் கைலியும், வெள்ளை ஊதா கலர் அரைகை சட்டையும் அணிந்திருந்தார். பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News