ஸ்ரீரங்கம் அருகே மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம்

மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால், நோய் பரவும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2021-11-24 07:33 GMT

அயிலாப்பேட்டை கிராத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா அயிலாபேட்டை பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News