திருச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-11-08 07:36 GMT

திருச்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் இடைவெளி விட்டு கனமழைபெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 2 நாட்கள்ஓய்ந்திருந்த மழை நேற்று நள்ளிரவுக்கு மேல் மாநகரிலும்,புறநகர் பகுதிகளிலும் விடிய, விடியகனமழை பெய்தது. இதனால் குமரன்நகர், பேங்கர்ஸ் காலனி விஸ்தரிப்பு, சாரதா அவன்யூ,கொட்டப்பட்டு, புலிவலம்,பெட்டவாய்த்தலை, ஜீயபுரம்,துவரங்குறிச்சி, உறையூர், குழுமணி,லிங்காநகர் செல்வம் நகர்உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் உள்ள வீடுகளில்மழைநீர் புகுந்தது. மேலும் விடிய,விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கோப்பு, கொடியாலம்,புலிவலம் பகுதிகளில் நூற்றுக்கணக்கானஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தவாழை, நெல் பயிர் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பராய்த்துறை, கொடியாலம் பகுதிகளில் குடியிருப்புகளிலும், வீடுகளுக்குள்ளும் தண்ணீர்புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சிமாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏரி,குளங்கள் நிரம்பி உள்ளது.விவசாயிகளுக்கு மகிழ்ச்சிளித்தாலும் கூட பல்வேறுஇடங்களில் நீரில் மூழ்கியநெற்பயிர்கள் அழுகும் அபாயம்ஏற்பட்டுள்ளது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் கோரையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

Tags:    

Similar News