திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.

Update: 2021-09-28 08:00 GMT
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நவீன்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மண்பாறை சந்தனபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் நவீன் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்துள்ளார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து நண்பர்கள் 5 பேருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார்.

காவிரி ஆற்றில் குளிக்க ஆசைப்பட்ட நவீன்  நண்பர்களோடு காவிரியில் இறங்கி குளித்தார்.அப்போது மேலணையில் 2 வது மதகு பகுதியில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியதாதல் நவீன் மட்டும் தண்ணீரில் மூழ்கினார். அப்போது அவருடன் குளித்து கொண்டிருந்தவர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஒடிசென்று காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் தண்ணீரில் ஆழமான பகுதியில் சென்றதால் காப்பாற்ற முடியாமல் போனது. பின்னர் திருச்சி தீயணைப்பு வீர்ர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொது மக்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கியவரின் உடலை மீட்டனர்.

பின்னர் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News