திருச்சி பெட்டவாய்த்தலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

திருச்சி பெட்டவாய்த்தலை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2021-11-24 11:00 GMT

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகில் உள்ள காவல்காரபாளையத்தை சேர்ந்தவர் தங்கையன் (வயது 75). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அரசி மலையாளி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.  அப்போது திருப்பராய்த்துறை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் தங்கையன் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் தங்கையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  தங்கையன்  இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News