ஸ்ரீரங்கத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

திருச்சி அருகே, சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-08 03:45 GMT

திருச்சி திருவானைக்காவல் நெல்சன்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் முருகேஷ் (வயது 21). தச்சு தொழிலாளி. இவர், வேலைக்கு சென்ற இடத்தில்,  13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து,  அச்சிறுமியின் பெற்றோர், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் அளித்தார். அதன் பேரின், போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசை கைது செய்தனர்.

Tags:    

Similar News