திருச்சி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் டிரைவர் பலி

திருச்சி அருகே நள்ளிரவில் சரக்கு வேன்கள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார்.

Update: 2022-01-26 05:15 GMT

விபத்துக்குள்ளான வேன். 

திருச்சியில் இருந்து நேற்று இரவு ஒரு சரக்கு வேன் பழங்களை ஏற்றிக்கொண்டு கோபிசெட்டிபாளையத்தை நோக்கி சென்றது. வேனை,  கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். வேன் பெட்டவாய்த்தலை அருகே கரும்பு ஆராய்ச்சி நிலையம் அருகே சென்ற போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி தக்காளி ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 சரக்கு வேன்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில்,  பழங்களை ஏற்றி சென்ற வேன் டிரைவர் நவீன்,  பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கருப்பையா, அப்பாஸ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெட்டவாய்த்தலை போலீசார்,  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News