திருச்சியில் 2 குழந்தைகளுடன் சென்ற தந்தை எங்கே?

திருச்சியில் 2 குழந்தைகளுடன் மாயமான தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-09-18 13:45 GMT

ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் (பைல் படம்)

திருச்சி திருவானைக்காவல் பேங்கர்ஸ் காலனியை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் வைத்தியநாதன் ( வயது 46). இவருக்கு தாயுமானசர்மா (வயது20)என்ற மகனும், சுபிக்க்ஷா (வயது17) என்ற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் வைத்தியநாதனின் மனைவி இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில், மிகுந்த விரக்தியில் இருந்த வைத்தியநாதன் தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வைத்தியநாதனின் சகோதரர் முரளிகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிந்து மாயமான வைத்தியநாதன், அவரது மகன் தாயுமானசர்மா மற்றும் அவரது மகள் சுபிக்க்ஷா ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்.

Tags:    

Similar News