முசிறியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் சிவராசு ஆய்வு

முசிறி ஒன்றியம் பெரமங்கலம் ஊராட்சியில் கொரோனாவால் தடையசெய்யப்பட்ட பகுதியை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-06-03 06:44 GMT

முசிறி ஒன்றியம் பெரமங்கலத்தில் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதியை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி  மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக முசிறி ஊராட்சி ஒன்றியம் பெரமங்கலம் கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதி கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார்  உடன் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News