தொட்டியம் அருகே கபடி தகராறில் கத்திக்குத்து - 9 பேர் மீது போலீஸ் வழக்கு

தொட்டியம் அருகே கபடி தகராறில் நடந்த கத்திக்குத்து தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2022-01-18 08:17 GMT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கொளக்குடிபட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19). இவர் நேற்று தனது தம்பி தினேஷ் மற்றும் உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சிலர் ரமேஷிடம் இனிமேல் நீ கபடி விளையாட கூடாது என தகாத வார்த்தையில் திட்டி கத்தியால் ரமேஷை முதுகில் குத்தியதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க முயன்ற ரமேஷின் தம்பி தினேஷிக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பிரவீன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News