தொட்டியம் அருகே அம்மன்குடியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு

தொட்டியம் அருகே அம்மன்குடியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவி உயிரிழந்தார்.

Update: 2021-09-26 03:08 GMT

தொட்டியம் அருகே  மின்சாரம் தாக்கிய உயிரிழந்த மாணவி

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அம்மன்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயக்கூலித்தொழிலாளி ராஜமாணிக்கம். இவரது மகள் 17- வயதுள்ள சங்கவி.

இவர் கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்  அம்மன்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இரவு 7-மணியளவில் சங்கவி டியூசன் சென்று விட்டு தனது சைக்கிளில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள தகரகொட்டகையில் சைக்கிளை நிறுத்திய போது தகர கொட்டகையில் இருந்து மின் வயரில் எதிர்பாராதவிதமாக மோதியதில் சங்கவி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சங்கவியின் தந்தை ராஜமாணிக்கம் தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் 12-ஆம் வகுப்பு மாணவி சங்கவியின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 12-ஆம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அம்மன்குடி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News