திருச்சி அருகே கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்

வேறொரு பெண்ணுடன் பேசிய கூட்டுறவு ஆய்வாளரை தாக்கிய மனைவி குடும்பத்தினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-11 06:30 GMT

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் கூட்டுறவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜீவானந்தம் (வயது 34). இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பவானிதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜீவானந்தம் அவருடைய தூரத்து உறவினரான எமல்டாமேரி என்ற பெண்ணை தன்னுடைய வீட்டில் அழைத்து பேசியுள்ளார். இது பவானிதேவிக்கு தெரியவந்ததையடுத்து அவருடைய உறவினர்கள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் என மொத்தம் 8-க்கும் மேற்பட்டோர் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்று எமல்டாமேரி, ஜீவானந்தம் ஆகிய இருவரையம் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து ஜீவானந்தம் தொட்டியம் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News