தொட்டியத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவிற்கு அஞ்சலி
தொட்டியத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
தொட்டியத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான சங்கரய்யா கடந்த புதன்கிழமை காலமானார். 102 வயதில் காலமான அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுர்களும் மரியாதை செய்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொட்டியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமையில் புகழஞ்சலி கூட்டம்நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி , தி.மு.க. நகர செயலாளர் விஜய்ஆனந்த், தி.மு.க. வடக்குமாவட்ட மாணவரணி செயலாளர் காடுவெட்டி அகதீஸ்வரன், முன்னாள் காங்கிரஸ் நகர தலைவர்கள்மோகன் , அய்யாசாமி, ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர் ,கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏலூர்பட்டி முருகன், முருகானந்தம்,கட்டுமான சங்க தோளூர்பட்டி தேவராஜ், திருநாராயணபுரம் தர்மலிங்கம், சமூக ஆர்வலர் நீலமேகம், சந்தப்பேட்டை அஸ்ரப் உள்ளிட்ட பலர்கலந்துக் கொண்டு சங்கராய்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.