புத்தாநத்தம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

புத்தாந்த்தம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

Update: 2021-11-07 08:18 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறையைஅடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்தவர் வித்யா (வயது 27). நேற்று இவரது கணவர் கார்த்தி மணப்பாறைக்கு வேலைக்குசென்று விட்டார். வித்யா மாடுமேய்க்கசென்று விட்டு வீடு திரும்பிய போது பின்பக்க கதவு உடைந்திருந்தது. வீட்டினுள்சென்று பார்த்த போது பீரோவை திறந்து2 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் பணம்கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து வித்யா புத்தாநத்தம் போலீசில்புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் திருச்சியிலிருந்து வந்த தடயவியல்துறையினர் தடயங்களை சேகரித்தனர்.மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டது. மேலும் இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களைதேடி வருகின்றனர்.

Tags:    

Similar News