மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2022-03-11 15:45 GMT

மணப்பாறையில்  குட்கா விற்பனை செய்த  இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ராஜமணி வெற்றிலை  கடை மற்றும் காவல்காரன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயா மளிகை என்ற கடையிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ராஜமணி வெற்றிலை கடையில் 16.09.2021 அன்றும், காவல்காரன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயா மளிகை கடையில் 04.01.2022 அன்றும் ஆய்வில் அவர்களது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடித்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 28.02.2022அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 28.02.2022 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளுக்கும் 9.03.2022-ல் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த இரண்டு கடைகளுக்கும் இன்று  திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில்  சீல் வைத்தனர்.


Tags:    

Similar News