மணப்பாறை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மணப்பாறை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-02-28 04:55 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பஸ் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப் பட்டி அருகே சென்றபோது, பஸ்சின் பின்பகுதி கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது. கற்களும் பஸ்சின் உள்பகுதியில் வந்து விழுந்தன.

இதனைக்கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சிடைந்தனர். உடனே, டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு பார்த்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைத்ததுடன் டிரைவர் மீதும் கல்லை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்த தகவலின்பேரில், மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News