திருச்சியில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

திருச்சியில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் சிவராசு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்.

Update: 2021-05-31 12:22 GMT
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்  வட்டம் கோவதக்குடி கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் சந்தித்து அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News