திருச்சி அருகே பள்ளி மாணவி தீ குளித்து தற்கொலை: போலீசார் விசாரணை

திருச்சி அருகே பள்ளி மாணவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-01-05 07:15 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்தமேடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானவேல் மகள், 16 வயதான சியாமளா தேவி. இவர் பாலையூரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி,  அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவர்,  கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை 6, மணிக்கு மேல் தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி,  தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News