சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவி
திருச்சி அருகே நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
சிறப்பு மனு நீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள குருவம்பட்டி என்ற கிராமத்தில் இன்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மொத்தம் 510 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் அம்பிகாபதி, மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.