திருச்சி அருகே முதியோர் இல்லம்- குழந்தைகள் நல காப்பகம் திறப்பு
திருச்சி அருகே முதியோர் இல்லம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகம் திறக்கப்பட்டு உள்ளது.;
விழாவில் மாற்றுதிறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
திருச்சி நம்பர் 1-டோல்கேட் பகுதியில் ஸ்ரீவிருத்தாஸ்ரம் அமைப்பு சார்பில் முதியோர் இல்லம் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,ஸ்ரீவிருத்தாஸ்ரம் நிறுவனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மனநல மருத்துவர் ஆருத்ரா கோபாலகிருஷ்ணன், மருத்துவர் சுஜீதா சந்திரபாபு, மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், மாவட்ட செயலாளர் இளங்கோ, ஆர்.கே.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கலைக்காவிரி கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் சதீஸ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
திருச்சி மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுனிஷா, பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா, திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அனிதா, காவல் ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு 30 பேருக்கு ஒரு மாதத்திற்க்கான மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது.