திருச்சி அருகே தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திருச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 51/2 பவுன் தங்க சங்கிலி பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-02-24 04:15 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை ஊராட்சி தெற்கு சாலப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இருவரும் இரவு சாப்பிட்டபின் வீட்டு வராண்டாவின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 51/2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனால் திடுக்கிட்டு எழுந்த தனலட்சுமி அந்த ஆசாமிகளை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அந்த ஆசாமிகள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியின் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News