திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்

திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-27 15:18 GMT

திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி .தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பி.ஜே.பி. அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றம் அருகில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது

மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், தேர்தல் அதிகாரி பாபுராஜ் கலந்து கொண்டனர்

மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் , முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ்,மாமன்ற உறுப்பினர்கள் சுஜாதா, ரெக்ஸ்,  மாநில பொதுச் செயலாளர் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன் ஜி. கே. முரளி பேட்ரிக் ராஜ்குமார் ராஜலிங்கம்,கோட்டத் தலைவர்கள்* சிவாஜி சண்முகம், ரவி ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ்,மாவட்ட துணைத்தலைவர்கள் கிரேசி ஜார்ஜ், மகேந்திரன்,முரளி சார்லஸ் மெய்யநாதன் சிக்கல் சண்முகம்

மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா,உறையூர் எத்திராஜூ அண்ணாசிலை விக்டர்,  மணிவேல், அரியமங்கலம் சக்திவேல் தாராநல்லூர் மாணிக்கவாசகம் உய்யகொண்டான்திருமலை பாஸ்கர் ,மலைக்கோட்டை சேகர், ஹெலன், சரவணசுந்தர் ஜீவா நகர் மனோகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News