லால்குடியில் தினமும் 500 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

லால்குடியில் தினமும் 500 பேருக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ சௌந்திரபாண்டியன் தொடங்கிவைத்தார்.

Update: 2021-06-09 07:00 GMT

லால்குடியில் தினமும் 500 பேருக்கு மதியஉணவு வழங்கும் பணியை எம்எல்ஏ சௌந்திர பாண்டியன் தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி ஊரடங்கு நாட்களில் லால்குடி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தினமும் 500 க்கும் மேற்பட்டோர் பயன் பெறும் வகையில் மதிய உணவு பொட்டலங்களை லால்குடி சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ வழங்கி துவக்கி வைத்தார்.

உடன் நகர செயலாளர் துரைமாணிக்கம், ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன்,ஆங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் கலந்து கொண்டனர்.

உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆல்பா அறக்கட்டளை நிர்வாகி ராஜமாணிக்கம், ஜாஸ்மின் அறக்கட்டளை நிர்வாகி கிறிஸ்து ராஜா, இயற்கை விழுதுகள் நிறுவனர் ஷியாம் சுந்தர் மற்றும் நிர்வாகிகள்செய்திருந்தனர்.

Tags:    

Similar News