லால்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் நடும் பணி : அமைச்சர் தொடங்கி வைத்தார்

லால்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-06 14:30 GMT

லால்குடி பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு லால்குடி அருகே பல்லபுரம் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்மரக்கன்றுகளை  மியாவாக்கி முறையில் நடவு செய்து அடர்வனம் உருவாக்கும் பணியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏ செளந்திரபாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News