சமயபுரம் அருகே ரூ.5 லட்சம் போலி மது பாட்டில்கள் பறிமுதல்: போலீசார் அழிப்பு

சமயபுரம் அருகே ரூ.5 லட்சம் போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் ஜேசிபி இயந்திரம் கொண்டு கொட்டி அழித்தனர்.

Update: 2022-01-07 06:45 GMT

போலி மது பாட்டில்களை அழிக்கும் பணியில் போலீசார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் போலி மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் டிஎஸ்பி முத்தரசு தலைமையில் மதுவிலக்கு போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு இருங்களூரைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் லாரன்சுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 90 அட்டைப் பெட்டிகளில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 4,310 போலி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த போலி மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த மதுவிலக்கு போலீசார் லாரன்ஸ், குப்புசாமி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்த போலி மதுபான பாட்டில்களை சிறுகனுர் அருகே உள்ள தச்சங்குறிச்சி வனப்பகுதியில் திருவெறும்பூர் மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் திருச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் வைத்தியநாதன் மேற்பார்வையில் 90 அட்டை பெட்டிகளில் இருந்த போலி மதுபான பாட்டில்கள் கொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

Tags:    

Similar News