தூத்துக்குடி அருகே மகனை கழுத்தை நெறித்து கொன்ற தாய், தற்கொலை

தூத்துக்குடி அருகே மகனை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-25 16:59 GMT

 பைல் படம்

தூத்துக்குடி அருகே உள்ள முறப்பநாட்டில் குடும்ப தகராறில் 3வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலிசாரின் முதற்க்கட்ட விசாரணையில் : தூத்துக்குடி அருகே உள்ள முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் விக்னேஷ் (40). லாரி டிரைவர். இவரது மனைவி சண்முக லட்சுமி (36),

இந்த தம்பதியருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு கமலேஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்குப் பின்பு கணவன் மனைவி கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் விக்னேஷ் தினசரி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் விக்னேஷ்க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபரம் சண்முகலட்சுமிக்கு இன்று தெரியவந்தது

இதைத்தொடர்ந்து கணவன் மனைவிக்குள் தகராறு முற்றியது. இதனால் மனம் உடைந்த சண்முக லட்சுமி தனது மகனுடன் வீட்டுக்குள் சென்று கதவை உட்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

பின்னர், தனது மகனை கொலை செய்து, ஒரு கயிற்றில் தூக்கில் தொங்க விட்டார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விக்னேஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மனைவியும் குழந்தையும் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொறுப்பு விமலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் சண்முக லட்சுமி திருமணமாகி நான்கு ஆண்டுள் ஆவதால் தூத்துக்குடி சார் ஆட்சியர் இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனிடையே சண்முக லட்சுமியின் பெற்றோர் முறப்பநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் விக்னேஷ், மாமனார் லட்சுமணன், மாமியார் மல்லிகா, அவரது அண்ணன் சுரேஷ் ஆகிய 4பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News