தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது

தேனி அருகே பூதிப்புரத்தில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-08 02:15 GMT

தேனி பூதிப்புரத்தை சேர்ந்தவர் அருண், 31. அதே பகுதியை சேர்ந்தவர் ஆசை, 41. இவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும், கேரளாவிற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பழனிசெட்டிபட்டி போலீசார் ரெய்டு நடத்தி இருவரையும் கைது அவர்கள் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News