தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 1,020 பேருக்கு கொரோனா தொற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 1,020 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-06-03 16:45 GMT

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 7,28,691 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 50,150 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 42,767 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 6,839 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 6,626 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1,020 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News