பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் திருப்பனந்தாளில் சுற்றிவளைப்பு

திருப்பனந்தாளில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-25 02:13 GMT

திருப்பனந்தாளில் பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு கைதான பாரதி.


திருப்பனந்தாள்:

திருப்பனந்தாளில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அடுத்த பாலாக்குடி, வடக்கு தெருவை சேர்ந்தவர், மகேந்திரன் மனைவி மேரி (எ) தமிழ்ச்செல்வி (35). இவர் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் பாரதி (30), மேரி செல்வதை கவனித்து கொண்டு, பின்புறமாகச் சென்று, மேரியை பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேரி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் மேரியை மீட்டு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, பாரதியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News